About Me

'நான்' என்னும் மையத்தை மட்டுமே அச்சாகக் கொண்டு என்னையே சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.., இந்த பூமியைப் போல. ஆனாலும் என்னைச் சூழ்ந்திருக்கும் எண்ணிலடங்கா கோள்களை அவைகளின் கவனம் கலையாது கவனித்துக் கொண்டு, அவைகளின் தடயம் பதியாது தனித்து நிற்க விரும்புகிறேன். இருப்பினும் சில நட்சத்திரங்களின் தாக்கங்கள் என்னையும் அறியாமல் அவைகள் பால் ஈர்த்துக் கொள்கின்றன.., சூரியனைப் போல, சுற்றி வரச் செய்கின்றன. பல சுழற்சிப் பாதைகளின் சிக்கல்களினூடே, இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கான சிறு நிலாவினை.

Sunday, July 29, 2007

Kumbakonam Fire Accident - A Retention.

கும்பகோணம்
இப்போது
கர்ணகொடூரம்.


ஆண்டவா!
அதிகாரிகளின்
அலட்சியத்தை
அறிவிக்க..

நிர்வாகிகளின்
பேராசையை
பிரஸ்தாபிக்க...

ஊழியர்களின்
கவனக் குறையை
கவனிக்க...

மழலை உயிர்கள்
என்பது
மிகவே மிகுதி.

குழந்தைகளென்றால்
கொள்ளை பிரியமெனில்
நீயே இங்கு வரலாமே!!
இத்தனை பேரை
மொத்தமாய்க்
கூட்டிச் சென்றாயே!!

நெருப்பே!!
எரியும் போதே
உன் இதயத்தையும்
எரித்து விடுவாயோ!
உன் கோரப் பசிக்கு
குழந்தைகள் தானா
கிடைத்தார்கள் ??

தீபங்களுக்கு
கொள்ளி வைத்ததில்
குதூகலப்ப்டாதே.
இப்போது
விறகுகளும்
உனை ஏற்றிட
கூச்சப்படுகின்றன..
கற்பூரம் கூட
தலை குனிகிறது..


நிர்வாகமே!!!
உன் சீர்கேட்டின்
சாட்சியாய்
இச்சம்பவம்
காலத்தின் பதிவேட்டில்..

நீ வருமானத்திற்கு
வகுத்த வழியில்
வருகிறது அவமானம்.

உன் பணத்தாசை
இன்று பிணக்குவியலை
பரிசளித்திருக்கிறது.

பல நூறு
குழந்தைகள்
காத்திட்ட
தொன்னூறு
தியாக மலர்கள்
சாந்தி பெற

இனியேனும்
திருந்தி விடு..

இனியும்
பள்ளிக்கூடங்கள்
பலிகூடங்கள்
ஆக வேன்டா..

No comments: