About Me

'நான்' என்னும் மையத்தை மட்டுமே அச்சாகக் கொண்டு என்னையே சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.., இந்த பூமியைப் போல. ஆனாலும் என்னைச் சூழ்ந்திருக்கும் எண்ணிலடங்கா கோள்களை அவைகளின் கவனம் கலையாது கவனித்துக் கொண்டு, அவைகளின் தடயம் பதியாது தனித்து நிற்க விரும்புகிறேன். இருப்பினும் சில நட்சத்திரங்களின் தாக்கங்கள் என்னையும் அறியாமல் அவைகள் பால் ஈர்த்துக் கொள்கின்றன.., சூரியனைப் போல, சுற்றி வரச் செய்கின்றன. பல சுழற்சிப் பாதைகளின் சிக்கல்களினூடே, இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கான சிறு நிலாவினை.

Monday, January 21, 2008

சர்க்கரை
கரையாத
காப்பியின்
கடைசி
இனிப்பு மடக்குகள்
உணர்த்துகின்றன
சில வாழ்வியல் நியதிகளையும்,
பல சொலப்படாத தத்துவங்களையும்.

வழக்கம் போல,
அலட்சிய சப்தங்களோடு
உறிந்து குடிக்கிறேன்
கடைக்காரனை
சபித்துக்கொண்டே...

Wednesday, January 2, 2008

பொன் நிறத் தாமரை,

ஊஞ்சலாடி,

விஜயாலயன்,

மயிற்பீலி,

உச்சிமலை,

wiki,

மந்த மாருதம்,

பூக்குட்டி,

சமீபத்தில்

Amores perros.

இன்று,

உன்னை பார்த்த பின்

நீ.


நான்

ஒவ்வொருமுறை

பிறக்கும் போதும்

எனக்கிட்டுக் கொண்ட

பெயர்கள் இவை.

மர்மம் மிகுந்த
இயற்கையின்
மௌனத்தை
தியனித்துக்
கொண்டிருக்கிறேன்,
TV சத்ததின்
இரைச்சல்களுக்கும்
இரயில் வண்டியின்
எக்காளங்களுக்கும்
நடுவே..
அந்நொடியிலே
இக்கவிதையையும்
யோசித்தேன்.

How to Name it..

ஒரு ஊரில் ஒரு நரி.,
அத்தோடு கதை சரி.

இதுவே

கதை..,

கவிதை..,

பிறகு

இதன் தலைப்பு.