About Me

'நான்' என்னும் மையத்தை மட்டுமே அச்சாகக் கொண்டு என்னையே சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.., இந்த பூமியைப் போல. ஆனாலும் என்னைச் சூழ்ந்திருக்கும் எண்ணிலடங்கா கோள்களை அவைகளின் கவனம் கலையாது கவனித்துக் கொண்டு, அவைகளின் தடயம் பதியாது தனித்து நிற்க விரும்புகிறேன். இருப்பினும் சில நட்சத்திரங்களின் தாக்கங்கள் என்னையும் அறியாமல் அவைகள் பால் ஈர்த்துக் கொள்கின்றன.., சூரியனைப் போல, சுற்றி வரச் செய்கின்றன. பல சுழற்சிப் பாதைகளின் சிக்கல்களினூடே, இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கான சிறு நிலாவினை.

Wednesday, January 2, 2008

மர்மம் மிகுந்த
இயற்கையின்
மௌனத்தை
தியனித்துக்
கொண்டிருக்கிறேன்,
TV சத்ததின்
இரைச்சல்களுக்கும்
இரயில் வண்டியின்
எக்காளங்களுக்கும்
நடுவே..
அந்நொடியிலே
இக்கவிதையையும்
யோசித்தேன்.

No comments: